✔ POLITICAL IDEOLOGY / அரசியல் சித்தாந்தம்

 

விறல் மை 

மனிதநேயம் எனும் அறம் கொண்டு வேற்றுமை அழிப்போம் விறல் மைகொண்டு.

வேற்று(மை) கொண்டு அழித்திடுவோம்...




விவ_சாயம்

விவசாயம் அதில் கலந்திட்டதோ அரசில் எனும் சாயம், நெஞ்சுள் வித்தென கொண்டுள்ளோம் தலைமுகளின் காயம், வெள்ளமாய் மாயும் ஊழல் எனும் சாயம், காத்திடுவோம் நம் சேயும், ஒரு விரல் மை கொண்டு அளித்திட நீயும்...

இம்மண்ணின் பிறப்பென பெருமிதம் கொண்டு நிதம் இயங்களையில் வீரம் பேசுகிறோமே

 நடவு முதல் அறுப்பு வரை அனுதினம் அன்னையென காத்து  நஞ்சூண்டு தன்னையும் தாய்மண்ணிற்கு உறமென நிதம் மாய்க்கின்றான் விதைத்தவனே...



சமூக ஆர்வலர் எனும் முகமூடி



முகமூடியிட்டு ஒரு மானிடனின் ஆரோக்கிய வாழ்விற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் கல்வி முக்கியத்துவம் மற்றும் பணத்தின் முக்கியத்துவத்தை பேசும் சமூக ஆர்வலர்கள், இம்மண்ணில் உயர் வகுப்பு நடத்தைகள் என குருட்டு காரணமிட்டு கல்வியும், செல்வமும் இல்லா சமானிய தனிநபரின் நடத்தைகளை அருவெறுப்பதும், இழிவென நகைத்திடுவதும், ஏழை எனும் காரணத்தினால் கொச்சைப்படுத்துவதும் தன் பலமென உணரும் பல காட்டுமிராண்டிகளுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், ஆதராளர்களாக இருக்கும் வரை நீங்கள் சமத்துவத்தை சுவாசிக்காது மாண்டுபோன மனிதர்களின் எண்ணிக்கைகளுள் உங்களின் பெயரை நீங்களே எழுத்துகின்றீர்கள் என்பதை உணர வேண்டியது அவசியம்.



A REGRETFUL EGALITARIAN FORCE / வருத்தமளிக்கக்கூடிய சமத்துவ சக்தி



Money represents the most egalitarian force in today's society, yet it is a sad truth that it confers power on whoever possesses it.

பணம் இன்றைய சமூகத்தின் மிகவும் சமத்துவ சக்தியாகும். யார் அதை வைத்திருந்தாலும் அது அதிகாரத்தை அளிக்கிறது என்பது வருத்தமளிக்கக்கூடிய உண்மை ஆகும்.




WE ARE STILL SAVAGES / நாம் காட்டுமிராண்டிகளே 



We are still savages, until we stop harming all other living beings.


நாம் காட்டுமிராண்டிகளே, பிற பிறப்புகளுக்கு தீங்கு விளைவிப்பதை நிறுத்தும் வரை.




INHUMAN ACTION /  மனிதநேயமற்ற செயல் 



Forgetting that we are also one of the creations of nature, the arrogant human birth with sixth sense that nurturing and licensing other living beings are hardheartedness and inhuman action.

நாமும் இயற்கையின் படைப்புகளில் ஒன்று என்பதை மறந்து, ஆறறிவு எனும் ஆணவம் கொண்ட மானுட பிறப்பென பிற உயிர்களை  வதைப்பதும், உரிமம் கொள்வதும் இரக்கம் மற்றும் மனிதநேயமற்ற செயல் ஆகும்.




FERTILIZER CALLED FARMER / விவசாயி எனும் உரம்


 


இம்மண்ணின் பிறப்பென பெருமிதம் கொண்டு நிதம் இயங்களையில் வீரம் பேசுகிறோமே, நடவு முதல் அறுப்பு வரை அனுதினம் அன்னையென காத்து நஞ்சூண்டு தன்னையும் தாய்மண்ணிற்கு உறமென நிதம் மாய்க்கின்றான் விதைத்தவனே. 

Always we voicing on social medias that Proud to be existing born of this soil. From planting to harvest, the one who care every day, sows and grows is the one who sip venom and offering himself continually as fertilizer to the mother earth.



SEEDS OF DEMOCRACY / இம்மண்ணின் ஜனநாயகம்




 

As long as there are regimes that deal with the common people by giving money to the ever-accumulating corpse, the seeds of democracy will not be able to germinate in this ground.

நித்தம் குவியும் பிணத்திற்கு பணம் கொடுத்து சாமானிய மக்களை சமாளிக்கும் ஆட்சிகள் உள்ள வரை இம்மண்ணில் ஜனநாயகம் எனும் வித்து முலைத்திட வாய்ப்பில்லை.




HERE WE DO PROPAGANDA CALLED GENTLE DEFIER / புரிவோம் மென்மை ரௌத்திரம் எனும் பிரச்சாரம்




 

Here we do with propaganda called gentle defier for good is aimed at consolidating the conspiracy that fell into the psyches of the civilization with the right of this land. 

புரிவோம் மென்மை ரௌத்திரம் எனும் பிரச்சாரம் இம்மண்ணின் உரிமம் கொண்ட மக்களாய் மக்களின் மனதினுள் விழுந்த விதியெனும் சதியினை கதிகலங்கிடச்செய்ய. 
 




MODERN BARBARISM / நவீன காட்டுமிராண்டித்தனம்


 


On this modern practical period from civilization to barbarism needs just a day. but barbarism to civilization requires a century.

நாகரிகத்திலிருந்து காட்டுமிராண்டித்தனத்திற்கு மாறுவதற்கு இந்த நவீன நடைமுறைக் காலத்திற்கு ஒரு நாள் தேவை. ஆனால் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து நாகரிகத்திற்கு மாறுவதற்கு ஒரு நூற்றாண்டு தேவைப்படுகிறது.




VOICE FOR EQUALITY/ சமத்துவத்திற்கான குரல்




 

Equality is barely became just like noise
why the thoughts of descendants doesn't work with that?


Scream and say loudly that this is our passion!
And why do you sing that too with inequality?


You are telling an untruth that the reason is politics!
And when will you recognize that it was one of the human traits?


Why you guys weigh others by weight of their wealth?
Share the riches with others whatever that you have within you called good intentions.


Are there any separations in cosmic births?
Try to love each one as much as we do ourselves!


Why you people do enumeration by numbers?
Let's win the equivalence with good intentions!


We are one among natural births.
Why contempt other lives in it.




சமத்துவமும் வெறும் சத்தமென்று ஆனதடா மானிடா!!
சந்ததிகளின் சிந்தையும் செயல்படாது போனதோ ஏனடா?


சத்தமிட்டு நம் உரிமமென்று உரக்க கூறடா!
அதையும் சமத்துவமற்று நீயும் பாடுவது ஏனடா?


காரணம் அரசியல் என்று பொய் கூறும் நீயடா!
மானிட பண்புகளில் ஒன்றென்று உணருவதும் எப்போதடா?


செல்வத்தின் எடைகொண்டு பிறரை எடைபோடுவதும் ஏனடா?
உன்னுள் இருக்கும் நல் எண்ணம் எனும் செல்வதை பிறரிடம் பகிர்ந்து கொள்ளடா!


அண்ட பிறப்புகளில் பிரிவினை உண்டோ கூறடா?
அனைவரும் நாம் என உறவுண்டு நேசித்து பாரடா!


எண்ணிக்கை கொண்டு கணக்கெடுப்பதும் ஏனடா?
நல் எண்ணம் கொண்டு சமநிலை வெல்வோம் பாரடா!


இயற்கையால் படைக்கப்பட்ட பிறப்புகளில் ஒன்று நாமடா!
அதில் மதிகெட்டு பிற உயிர்களை வதைப்பதும் ஏனடா?



IDEOLOGY OF EQUIVALENCE / சமத்துவம் எனும் சித்தாந்தம்



சாதி, மதம், இனம், மொழி நிறம் போன்றவைகளை நம் அடையாளமாக கருதுவதன் மூலம் சமத்துவம் எனும் சித்தாந்தத்தின் மதிப்பை பெறாத சந்ததிகளில் நாமும் அகதிகளாய் அடிபணிந்து செல்கின்றோம்.

By evaluating like caste, religion, race, language, colours as our identity, we are subjugated as a refugee in eras who do not obtain the value of the ideology of equivalence.



VIGOUREST FORCE / வீரியமிக்க சக்தி




Money is the most vigourest force in the existing civilization. It is an awful fact that it rules the humanity of those who possess it.

தற்போதுள்ள நாகரீகத்தில் பணம் மிகவும் வீரியமிக்க சக்தியாக உள்ளது. அதை வைத்திருப்பவர்களின் மனித நேயத்தையும் அது ஆளுகிறது என்பது ஒரு பயங்கரமான உண்மை.



EDUCATION FOR AN UNEVEN SOCIETY / சமச்சீரற்ற சமுதாயத்திற்கான கல்வி



"சாதிகள் இல்லையடி பாப்பா" எனும் வரிகள் பாட திட்டங்களில் ஒரு வரியாக மட்டும் இல்லாமல், கல்வி திட்டமே இவ்வரியாக இருக்க வேண்டுமடி பாப்பா.

"No caste and sub castes", those Lines are without only as just a line in a syllabus, the education syllabus should be like that,.



IDEOLOGY OF ECONOMIC DEVELOPMENT / பொருளாதார வளர்ச்சியின் சித்தாந்தம்


 

I refuse to smile at the fundamental development of the economy of practice despite lending voice to social advancement in the time of realizing its ideology.

சமூக வளர்ச்சிக்காக குரல் கொடுப்பினும் நடைமுறைகளின் பொருளாதாரத்தின் அடிப்படை வளர்ச்சியில் புன்னகைக்க மறுக்கிறேன் அதன் சித்தாந்தம் உணரும் நொடிகளில்.


தலைமுறைகள் கடந்துள்ளோம் கொரோணாவுடன்


வயிற்று பசி, தலைமுறைகளின் கனவுகள், லட்சியம் போன்ற எண்ணற்ற காரணம் கொண்டு அதனை சம்பாதிக்க இருபது ஆண்டுகள், உயிர் உற்ற, உயிர் அற்றவர்கள்  மற்றும் பணம் கோடி செலவழித்து பட்டப்படிப்பு எனும் படி ஏறி வாழ்நாள் பாதி வீணடித்து, நல்வழி பிறக்கும் என்று எண்ணி, வரி செலுத்தி மதி கெட்டு மீதம் உள்ள வாழ்நாளையும் இழக்கின்றோம் விறல் மை கொண்டு அறிந்தும், அறியாமலும் அரசியல்வாதிகள் எனும் மாநில மற்றும் தேசிய வளர்ச்சிக்கு தலைமுறைகளாய் தடையாய் உள்ள சில மனித உருவமுற்ற கொரோணா வியாதிகளுக்கு நோயாளிகளாய் நம்மை அறியா...





கொரோணா எனும் அரசியல்

நித்தம் குவியும் பிணத்திற்கு பணம் கொடுத்து சாமானிய மக்களை சமாளிக்கும் ஆட்சிகள் உள்ள வரை இம்மண்ணில்  ஜனநாயகம் எனும் வித்து முலைத்திட வாய்ப்பில்லை.

விழித்திடுமோ ஜனநாயகம் எனும் நாம்!!! 




கொரோணா அரசியல்


விடாது உயரம் உயரும் உயிர்கள் உயராது இருந்திடுமோ?

இனியாவது குறைந்திடுமோ?

பிராணவாயு இல்லா, பரிதாப பிணங்களாக காட்சிக்கு உள்ளாகும்  மானிட பிறப்புகளின் உயிர்கள் இனியாவது வீழாது வாழ்ந்திடுமோ?


காரணம் ஆயிரம் கோடி ஆண்டுகளாய் நம்மை காத்தருளும் கடவுளோ!,

இல்லை, உணவின்றி பசியால் உயிர் பிரியும் வரை வலியால் துடிப்பவனோ!

இல்லை, பணத்திற்காக நோய் கொண்டு பிறர் உயிரை கொன்று ருசிப்பவனோ!

இல்லை ஆயிரம் கோடியில் கட்டப்படும் கோவிலுக்குள் அமைந்து நம்மை காத்தருள போகும் கடவுளோ!!!!




மானிட மனம் 

இணைய வாழ்க்கை எனும் இயல்பு தன்மை அற்ற வாழ்க்கையில் மானிட மனங்களும் போல் பார்வைக்குரியதாகிறதோ குழிகளாய் தமிழக தார் சாலையோ!!

நீயே உனது சாலைக்கான பொறியாளர்!.



மானிடா நான் மாடு டா



நிதம் உன் பசிக்கு என் குருதியை  வெண்ணிரமாக்கி பால் என பெயர் சூட்டி உரிமம் கொண்டாலும் மிருகநேயம் எனும் எண்ணம் கொண்டு அன்பு பாராட்டினாலும், மனித பிறப்பெடுத்த மிருகமாய் மனிதநேயமற்று எங்களை வதைப்பதும் ஏனடா மானிடா!!!

அரசியல் பேச மனிதநேயமற்ற பிழை புரியும் பீழை மானிடா நான் மாடு டா






JUSTICE FOR THE GODDESSES / போற்றப்பட வேண்டிவற்களுக்கான நீதி



A real man lost that the roaring grin as that i am a man, hope for equivalence in civilization, the belief of humanity in human beings, to say that some more due to distrust of the current practice faith in the judiciary and the legislation In times of failure while pleading for the justice goddesses who deserve endless admiration from birth have been hurt by acts of sexual violence.


நான் ஒரு மனிதன் என்று கர்ஜனைக்கும் புன்னகையை ஒரு உண்மையான மனிதன் இழந்தான், நாகரிகத்தில் சமமான நம்பிக்கை, மனிதர்களில் மனிதநேயத்தின் நம்பிக்கை, நீதித்துறையின் தற்போதைய நடைமுறை நம்பிக்கையின் மீதான மற்றும் சில அவநம்பிக்கையின் காரணத்தினாலும் மற்றும் சட்டம் தோல்வியுற்ற காலங்களில் நீதி தெய்வங்களுக்காக மன்றாடும் பொழுதுகளில் பிறப்பிலிருந்து முடிவில்லா போற்றுதலுக்கு தகுதியானவர்கள் பாலியல் வன்முறைச் செயல்களால் பாதிக்கப்படும் நொடிகளில்.

மீண்டும் பெற வழியுண்டோ எனது கர்ஜனையை!?




விவ சாயம்

விவசாயம் அதில் கலந்திட்டதோ அரசில் எனும் சாயம், நெஞ்சுள் வித்தென கொண்டுள்ளோம் தலைமுகளின் காயம், வெள்ளமாய் மாயும் ஊழல் எனும் சாயம், காத்திடுவோம் நம் சேயும், ஒரு விரல் மை கொண்டு அளித்திட நீயும்...

இம்மண்ணின் பிறப்பென பெருமிதம் கொண்டு நிதம் இயங்களையில் வீரம் பேசுகிறோமே!

 நடவு முதல் அறுப்பு வரை அனுதினம் அன்னையென காத்து  நஞ்சூண்டு தன்னையும் தாய்மண்ணிற்கு உறமென நிதம் மாய்க்கின்றான் விதைத்தவனே!!




மூவித்து 

தில்லியில் தொடர்போராட்டத்தில் நாம் நித்தம் மும்முறை உண்ணும் உணவில் மூன்று அரிசி பரிபோனதோ அய்யோ

நாமோ சின்னத்திரை நடிகை தூக்கிட்டதன் துக்கத்தால்  புலனத்தில் புகைப்படம் பகிற்ந்துகொள்கின்றோமோ இது பொய்யோ!


வீழ்ந்தது விவசாயி எனும் மூன்று வித்து!



No comments:

Post a Comment

Drop Your Comment Here